ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் எம்.பி.ஏ. மாணவி மானபங்கம்!

author img

By

Published : Jun 3, 2020, 5:55 AM IST

மும்பை: 22 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி மாணவியை மானபங்கம் செய்து, அடித்து துன்புறுத்தியதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

molestation  cross complaint  MBA  மகாராஷ்டிரா  எம்.பி.ஏ. பட்டதாரி மானபங்கம்  வழக்குப்பதிவு
molestation cross complaint MBA மகாராஷ்டிரா எம்.பி.ஏ. பட்டதாரி மானபங்கம் வழக்குப்பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விலே பார்லி பகுதியில், 22 வயதான பெண் ஒருவர் எம்.பி.ஏ. படித்துவருகிறார். இவரை திங்கள்கிழமை (ஜூன்1) இரவு சம்பாஜி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மானபங்கம் செய்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட ஐந்து பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை உறுதி செய்துள்ள காவலர் ஒருவர், “பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட ஐந்து பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது” என்றார். மேலும், இவர்களால் எம்.பி.ஏ. மாணவி மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கேரளாவில் கோவிட்-19க்கு பாதிரியார் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.