ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலையில் சம்பா மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சரோர் சுங்கச்சாவடியை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனியார் வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து ஜம்மு காஷ்மீர் போக்குவரத்து நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தினால் பள்ளி-கல்லூரி மாணவ மாணவியர், அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். நகரின் சில வழித்தடங்களில் மட்டும் ஆட்டோ ரிக்ஷாக்கள் செயல்பட்டன. அதே நேரத்தில் மக்கள் போக்குவரத்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
காங்கிரஸ், ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை சுங்கச்சாவடியை உடனடியாக ரத்து செய்யக் கோரியிருந்தன. புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஒன்பது விழுக்காடு வரி உள்பட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்துக் காவல் துறையினரால் கூறப்பட்டுவருகிறது.
இந்தப் போராட்டம் நேற்று நகரத்தின் விக்ரம்சவுக், ஜேவால் சவுக் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. அப்போது, 'சுங்கச் சாவடிகளை ஒழிக்க வேண்டும்' உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிக்க: 'வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்' - அமித் ஷா!