ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்: சிவசேனா கருத்து என்ன தெரியுமா!

author img

By

Published : Nov 15, 2020, 9:19 PM IST

Raut
Raut

மும்பை: மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ள நிலையில், இது யாருடைய வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

கரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் குறைந்துவரும் நிலையில், சில பகுதிகளில் அதன் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அம்மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்கிடையே வாக்குவாதம் வெடித்தது.

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது யாருடைய வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், "வழிபாட்டுத் தலங்கள் திறக்கும் முடிவில் யாரும் உரிமை கோர முடியாது.

அரசு வகுத்த பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பது கடவுளின் செயல். அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறப்பதும் கடவுளின் செயலே ஆகும்" என்றார்.

வழிபாட்டுத் தலங்களை திறக்கும் முடிவு இந்துத்துவாவின் வெற்றி என பாஜகவினர் கூறுகின்றனரே என்ற கேள்விக்கு, "கோயில்கள் மட்டும் திறக்கப்படவில்லை அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட உள்ளன. இது யாருடைய வெற்றியும் அல்ல யாருடைய தோல்வியும் அல்ல. பிரதமரின் உத்தரவின் பேரிலேயே வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.