ETV Bharat / bharat

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ஊதியம் - இந்திய ரயில்வே

author img

By

Published : Mar 25, 2020, 9:44 AM IST

Railways
Railways

டெல்லி: ஊரடங்கால் பாதிக்கப்படும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 31ஆம் தேதிவரை அனைத்துப் பயணிகள் ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால், ரயில்வை துறையில் பணிபுரியும் சில ஊழியர்கள் பாதிக்கப்படவுள்ளனர். எனவே, பாதிப்பைக் குறைக்கும்வகையில் இவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் ஊரடங்கால் பெரிதாகப் பாதிக்கப்படவுள்ளனர். எனவே, இவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் ஊரடங்கு தொடரும்வரை இவர்களுக்கு 70 விழுக்காடு ஊதியம் அளிக்கப்படும். இதனால், 50,000 ஒப்பந்த ஊழியர்கள் பயன்பெறவுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை
அறிக்கை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.