இது தொடர்பாக புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜவகர்லால் நேரு அரங்கில் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்பிகள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.