ETV Bharat / bharat

ஆற்றில் வெட்டி வீசப்பட்ட இளைஞர்: உயிருக்குப் போராடிய நிலையில் காவல் துறையினர் மீட்பு!

author img

By

Published : Oct 6, 2020, 4:20 PM IST

புதுச்சேரி: வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் இரண்டு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட இளைஞர் வெட்டி வீசப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில், காவல் துறையினர் இன்று அவரை மீட்டனர்.

ஆற்றில் வெட்டி வீசப்பட்ட இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஆற்றில் வெட்டி வீசப்பட்ட இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

புதுச்சேரி: இரண்டு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட இளைஞர், ஆற்றில் வெட்டி வீசப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (25). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக வானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் சங்கராபரணி ஆற்றின் வழியாக சென்ற பொதுமக்கள், ஆற்று புதருக்குள் வெட்டு காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த அரவிந்தை கண்டனர்.

இதையடுத்து, உடனடியாக வில்லியனூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு மருத்துவர்களுடன் வந்த காவல் துறையினர், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த அரவிந்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரவுடி கொக்கு கார்த்தி என்பவரது கொலை வழக்கில், அரவிந்த் முக்கிய சாட்சியாக இருந்துள்ளார்.

ஆற்றில் வெட்டி வீசப்பட்ட இளைஞரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

இதன் காரணமாகவே அடையாளம் தெரியாத நபர்கள் அரவிந்தை கடத்திச்சென்று, கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்தது. கொலை முயற்சியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தட்டிக்கேட்ட காவலருக்கு மார்க் போட்ட இளைஞர்; தட்டி தூக்கிய போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.