முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சிதம்பரம்,
சபரிமலை, அயோத்தி ஆகிய விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதே சரி. அனைத்து மாநிலக்கட்சிகளும் ஒன்றிணைந்து சரியான கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
பசுவதை தொடர்பாக ராஜஸ்தானில் மூன்று பேர் மீது அம்மாநில அரசு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளது; இது தவறான செயலாகும். காங்கிரஸ் தலைமையின் கவனத்துக்கு இவ்விஷயம் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. தவறுகள் உடனடியாக திருத்தப்படும் என தெரிவித்துள்ளார்.