ETV Bharat / bharat

கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை

author img

By

Published : Mar 24, 2020, 2:49 PM IST

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் தேசிய தலைநகரில் புதிதாக யாருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Kejriwal
Kejriwal

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் நடமாட்டத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய தலைநகரில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 24 மணி நேரத்தில் தேசிய தலைநகரில் புதியதாக யாருக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இதுவரை சிகிச்சை பெற்றுவந்த ஐந்து பேர் வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், நாம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் "நிலைமையை கைமீறி போக விடக்கூடாது என்பதே இப்போதைய மிகப்பெரிய சவால். இதற்கு உங்களின் (மக்கள்) ஒத்துழைப்புத் தேவை" என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Kejriwal
அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

இதுவரை டெல்லியில் 30 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத் அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, நாடு முழுவதும் இதுவரை 492 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 41 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும், 10 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா - நாட்டில் உயிர் பலி 10ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.