2018-19ஆம் ஆண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்வது ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளிட்ட அறிக்கை போன்று உருவாக்கப்பட்ட ஒரு அறிக்கை சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டது.
அதில், வரி செலுத்துவோரின் சிரமங்களைக் குறைப்பதற்காக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 31ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய வருமானவரித்துறை தன் ட்விட்டர் பக்கத்தில், "வருமான வரித் தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கியதாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்திட வேண்டும்" எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.