ETV Bharat / bharat

ஆந்திராவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு

author img

By

Published : Nov 26, 2020, 4:18 PM IST

man-raped-five-year-old-girl
man-raped-five-year-old-girl

அமராவதி: காக்கிநாடாவில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா கோலிபேட்டையைச் சேர்ந்த பில்லிராஜூ என்பவரது 5 வயது மகள் நேற்றிரவு(நவ.25) வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டார்.

இந்நிலையில், இன்று (நவ.26) காலை சிறுமியை தேடிய உறவினர்கள், ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் மீட்டனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்களால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறையினரிடம் உறவினர்கள் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 4 சிறுவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.