ETV Bharat / bharat

சந்தேகத்தின்பேரில் மனைவியைக் கொன்ற பள்ளி ஆசிரியர்!

author img

By

Published : Sep 6, 2020, 5:24 PM IST

Breaking News

புதுச்சேரி : மனைவிமீது சந்தேகப்பட்டு கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் முதலியார்பேட்டை திருமால் நகரில் வசித்து வந்தவர் விஜயன். இவர் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் விஜயன் தனது மனைவி சாந்தியின்மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (செப்.06) இருவருக்குமிடையில் மீண்டும் சண்டை பெரிதாக வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயன் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு புதுச்சேரி முதலியார் பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சாந்தியின் உடலை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.