ETV Bharat / bharat

கொரோனாவை எதிர்க்க கோமியம் - ஹிந்து மகாசபாவின் புதிய திட்டம்!

author img

By

Published : Mar 15, 2020, 6:48 AM IST

Hindu Mahasabha
Hindu Mahasabha

டெல்லி: கோவிட்-19 வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் விதமாக கோமிய விழாவை ஹிந்து மகா சபா டெல்லியில் நடத்தியுள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது இத்தாலி, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவிவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் விதமாக கோமிய விழாவை ஹிந்து மகா சபா டெல்லியில் நடத்தியது.

இந்த விழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மகாசபாவின் தலைவர் சக்கரபாணி மகராஜ், "பலரை தாக்கிவரும் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடவே இந்த கோமிய விழா நடத்தப்பட்டது.

கோமியத்தை அருந்தி இறைவனிடம் வேண்டினால் போதும், கொரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். கோமியத்தை அருந்தினால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, அனைவரும் கோமியத்தை அருந்தவேண்டும். நம் நாட்டிலுள்ள பல அமைச்சர்களும் கோமியத்தை அருந்துகின்றனர்" என்றார்.

இதேபோல கோமிய விழாவை நாடு முழுவதும் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல் - பத்ம விருது விழா ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.