சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான கிஷோர் சாம்ரைட் வருகிற மக்களவைத் தேர்தலில் பாலகாத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்.
இந்நிலையில் மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக் ஆரியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, ”இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் செலவுகளின் உச்ச வரம்பு ரூ 75 லட்சமாக நிர்ணயித்துள்ளது.
ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் தேர்தல் ஆணையம் தனக்கு ரூ. 75 லட்சம் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் தனது கிட்னியை விற்க அனுமதிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.