ETV Bharat / bharat

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 7, 2020, 10:38 AM IST

புதுச்சேரி : ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Fisherman protest in puduchery
Fisherman protest in puduchery

கரோனா தொற்று காரணமாக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கால் ஈரானில் உணவும் உறைவிடமும் இன்றி தெருவோரத்தில் பட்டினியால் தவிக்கும் 44 தமிழ்நாடு மீனவர்களை தாயகம் மீட்டுவர வலியுறுத்தி மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனவர் விடுதலை வேங்கைகள் மாநிலத் தலைவர் மங்கையர் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.