ETV Bharat / bharat

சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த யானைக் குட்டி!

author img

By

Published : Jun 16, 2020, 4:39 PM IST

Gariaband district Chhattisgarh Elephant's death in Dhamtari Elephant calf found dead forests of Dhamtari சத்தீஸ்கர் காட்டு யானை உயிரிழப்பு
சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த காட்டுயானை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்ட வனச்சரகத்தில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலத்திற்குள் யானைக்குட்டி ஒன்று சிக்கியுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தம்தாரி மாவட்ட வன அலுவலர் அமிதாப் வாஜ்பாய் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், சதுப்பு நிலத்தில் சிக்கிய யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் அங்கு கிடந்தது. காரிபந்த் மாவட்ட வனப்பகுதியிலிருந்து தம்தாரி மாவட்ட வனப்பகுதிக்குள் 21யானைகள் வந்ததாகவும் அந்த யானைக் கூட்டத்திலிருந்து காணாமல் போன குட்டியானைதான் உயிரிழந்தது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

யானைக்குட்டி உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா-சீனா மோதல்: தமிழ்நாட்டு வீரர் வீரமரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.