ETV Bharat / bharat

'அதில் பிரச்னை இல்லை, எங்கள் இலக்கு மாநிலங்களவைத் தேர்தல்'- சிவராஜ் சிங் சௌகான்

author img

By

Published : Mar 11, 2020, 11:37 AM IST

போபால்: மாநிலத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கட்சி கவலைப்படவில்லை தங்களின் இலக்கு மாநிலங்களவைத் தேர்தல் என மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.

'அதில் பிரச்னை இல்லை, எங்கள் இலக்கு மாநிலங்களவை தேர்தல்'- சிவராஜ் சிங் சௌகான்  மத்தியப் பிரதேச அரசியல் நிலவரம், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு, மாநிலளங்களவை தேர்தல்  Drafting for Rajya Sabha elections not floor test, says Shivraj Singh Chouhan  Shivraj Singh Chouhan, Rajya Sabha elections, floor test
Drafting for Rajya Sabha elections not floor test, says Shivraj Singh Chouhan

காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகியதையடுத்து முதலமைச்சர் கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கிறது.

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், “நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி கவலைகொள்ளவில்லை, மாநிலங்களவைத் தேர்தல் மீதே கட்சியின் கவனம் உள்ளது” என்றார்.

மாநிலங்களவையில் காலியாகவுள்ள 55 சீட்களுக்கு வருகிற 26ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக 22 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அதில் ஆறு பேர் அமைச்சர்கள்.

இதையும் படிங்க : மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் - வீழ்ச்சியைச் சந்திக்கும் காங்கிரஸ்?

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.