ETV Bharat / bharat

உதவியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

author img

By

Published : Sep 15, 2020, 8:48 PM IST

அலுவலர் உதவிப்பணியாளருக்கு பாலியல் தொல்லை தந்துவந்த வட்டாட்சியர் பணியினை நீக்கம்!
அலுவலர் உதவிப்பணியாளருக்கு பாலியல் தொல்லை தந்துவந்த வட்டாட்சியர் பணியினை நீக்கம்!

பெங்களூரு : கிராம சபை உதவியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய சிமோகா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தை அடுத்த பத்ராவதி தாலுக்காவில் உள்ள சித்தாபுரா கிராமத்தின் வட்டாட்சியராக இருப்பவர் சிவக்குமார். இவரது அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சுவாதி என்ற பெண்ணுக்கு, வட்டாட்சியர் சிவக்குமார் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.

மேலும், அப்பெண்ணிடம் சம்பளம் வழங்க வேண்டுமென்றால் தான் கூறுவதை கேட்கும்படி பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக அறிய முடிகிறது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தொடர்ச்சியாக இடையூறு செய்துவந்த சிவக்குமார் மீது பத்ராவதி பழைய நகர காவல் நிலையத்தில் சுவாதி இன்று (செப்டம்பர் 15) புகார் அளித்தார்.

கிராம நிர்வாகத்தின் உதவியைக் கேட்டு வரும் பெண்களிடம் இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைகளில் வட்டாட்சியர் மீது தலித் அமைப்புகள் புகார் அளித்துள்ளன. தொடர் போராட்டங்களுக்கு பிறகு, வட்டாட்சியர் சிவக்குமார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. உதவியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வட்டாட்சியரை ஷிவமோக மாவட்ட ஆட்சியர் கே.பி.சிவகுமார் பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.