ETV Bharat / bharat

டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்!

author img

By

Published : Jun 7, 2020, 3:08 PM IST

டெல்லி: கடந்த வாரம் மூடப்பட்ட டெல்லி எல்லைகள் மாநிலங்களுக்கிடையேயான இயக்கத்தின் பொருட்டு நாளை முதல் திறக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்!
டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்!

கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டன. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்கான வாகன இயக்கங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் மாநிலங்களுக்கிடையேயான இயக்கத்திற்காக டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “டெல்லி அரசு மருத்துவமனையின் படுக்கைகள் டெல்லியை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படும். அனைவரின் பயன்பாட்டுக்கும் மத்திய மருத்துவமனைகள் இயங்கும். ஜூன் மாத இறுதிக்குள் டெல்லி மருத்துவமனைகளில் 15 ஆயிரம் படுக்கைகளின் தேவை உண்டாகும். அனைத்து உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும். விருந்தகங்கள், ஹோட்டல்கள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டிருக்கும்” என்றார்.

குறிப்பாக, அதிகபட்ச சில்லறை விலையில் (maximum retail price) விதிக்கப்பட்ட 70 விழுக்காடு சிறப்பு கரோனா கட்டணம் வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் தளர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதையும் படிங்க: 'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.