ETV Bharat / bharat

கேள்விக்குறியான தகுந்த இடைவெளி: கங்கா தசராவில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

author img

By

Published : Jun 1, 2020, 7:25 PM IST

உபி.,யில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் கொண்டாடப்பட்ட கங்கா தசராவிழா!
உபி.,யில் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் கொண்டாடப்பட்ட கங்கா தசராவிழா!

பரூக்காபாத்: தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கங்கா தசரா விழாவை பக்தர்கள் கொண்டாடிய காணொலி சமூக வலைதளங்களில் வலம்வருகிறது.

நாட்டின் புனித நதியாகக் திகழும் கங்கை ஆறு பூமிக்கு வந்த நிகழ்வை கொண்டாடும்விதமாக கங்கா தசரா என்ற விழா கொண்டாடப்படுகிறது. இதனை உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மேற்கு வங்கம் என கங்கை ஆறு பாயக்கூடிய மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

கங்கா தசரா என்றால் கங்கையில் நீராடக்கூடிய 10 நாள்கள் என்று பொருள்படும். வைகாசி மாதம் அமாவாசை மறுநாளிலிருந்து பத்து நாள்கள் நாம் கங்கை நதியில் மூழ்கி குளித்தால் 10 வித பாவங்கள் நீங்கி முக்தியைத் தரக்கூடிய உயர்வு நிலையை அடைய முடியும் என புராணங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி கங்கா தசரா விழா கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்து வலைதளங்களில் ஒரு காணொலி வலம்வருகிறது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தகுந்த இடைவெளியின்றி தசரா விழாவினை கொண்டாடியது பதிவாகியுள்ளது.

பரூக்காபாத் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற சமய விழாக்களைக் கொண்டாட அனுமதியளிக்கவில்லை. ஆனால், கங்கை நதியில் புனித நீராடும் பகுதியான பாஞ்சால், தாய் ஆகிய கணவாய்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மூழ்கி குளித்தனர். இவ்விழாவை முன்னிட்டு பூக்கள், பூஜை பொருள்களை விற்க சிறிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து காவல் துறை அலுவலர் மண்னி லால் கவுர், “கரோனா பரவுவதைத் தடுக்கும்பொருட்டு நான்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. பக்தர்கள் தகுந்த இடைவெளியுடன் புனித நதியில் நீராடுவதை உறுதிசெய்ய அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம்” என்றார்.

இதையும் படிங்க: 75 நாள்களுக்கு பிறகு திறக்கப்பட்ட புதுச்சேரி பாரதி பூங்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.