ஜெய்ப்பூர்: மாநிலங்களவை தேர்தலுக்கான நடவடிக்கைகளை கண்காணிக்க பகுஜன் சமாஜ் கட்சியை அனுமதிக்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா, தலைமை தேர்தல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேர், காங்கிரஸ் சார்பில் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 6 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். தற்போது அவர்கள் வேறு கட்சி அடையாளங்களோடு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.