இமாச்சலப் பிரதேச ஆளுநர் மாளிகை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவைச் சந்திக்க வரும் மக்கள் கரோனா பரிசோதனை முடித்து, கரோனா இல்லை என்று நெகட்டிவ் ரிசல்ட் வந்த பின்னர் அதற்கான சான்றிதழுடன் வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, சிர்மாவுர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால், ஜூலை 21ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கைப் பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மருந்தகங்கள், மதுபானக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,457ஆக உயர்ந்துள்ளது. 401 பேர் தற்போது சிகிச்சை எடுத்துவருகின்றனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கிரண்பேடியால் ஏனாம் பிராந்தியத்தில் சுகாதாரக்கேடு: அமைச்சர் குற்றச்சாட்டு