ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 61,267 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Oct 6, 2020, 12:36 PM IST

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 61 ஆயிரத்து 267 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19
COVID-19

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 61 ஆயிரத்து 267 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 884 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 67 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாட்டில் மொத்தம் 66 லட்சத்து 85 ஆயிரத்து 83 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 19 ஆயிரத்து 23 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 56 லட்சத்து 62 ஆயிரத்து 491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 569 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (அக். 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 89 ஆயிரத்து 403 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 8 கோடியே 10 லட்சத்து 71 ஆயிரத்து 797 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக ஆட்சியில் உள்ள உ.பி, பிகாரை மாஃபியாக்கள் ஆளுகின்றனர் - பாஜக தலைவர் பரபரப்பு பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.