ETV Bharat / bharat

44 ஆண்டுகள் கடந்து அதிகரித்துள்ள மழைப்பொழிவு!

author img

By

Published : Aug 29, 2020, 2:57 PM IST

august-receives-25-pc-more-rainfall-highest-in-44-years-imd
august-receives-25-pc-more-rainfall-highest-in-44-years-imd

டெல்லி : கடந்த 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆகஸ்ட் மாதத்தில் பொழிந்த மழையின் அளவு அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளபாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில்,இந்திய வானிலை ஆய்வு மையம், தற்போது பெய்து வரும் மழைப்பொழிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ”கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையின் அளவு அதிகரித்துள்ளது.

நேற்று வரை (ஆக. 28) இந்த மாத்தில் பெய்த மழையின் அளவு 25 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 1983ஆம் ஆண்டு பெய்த மழையின் அளவை விட (23.8%) அதிக அளவாக உள்ளது.

நாட்டில் இயல்பைவிட ஒன்பது விழுக்காடு மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. பீகார், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது. ஆறுகளில் அதிக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால், பல்வேறு மாநிலங்கள் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன.

ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நாட்டின் நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த சேமிப்பு நிலை, கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளை விடவும் அதிகம்.

ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.