ETV Bharat / bharat

லீப் தினத்தில் ஒற்றுமை சிலை முன் புதிய முயற்சி

author img

By

Published : Feb 29, 2020, 5:33 PM IST

statue
statue

காந்திநகர்: லீப் தினமான (பிப்ரவரி 29) இன்று குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை முன் 182 யோகா கலைஞர்கள் 108 சூரிய வணக்கங்களை மேற்கொண்டனர்.

நான்கு வருடத்திற்கு ஒரு முறை வரும் லீப் தினமான பிப்ரவரி 29 ஆம் தேதி, இன்று வந்துள்ளது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவரும் நேரத்தை ஒரு வருடமாக கணக்கில் கொள்ளும் நிலையில், அதை சரியான அளவில் சமன்படுத்தும் விதமாக, நான்காண்டுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தின் ஒரு நாள் அதிகமாக வைத்து பிப்ரவரி 29 ’லீப் டே’ முறையைப் பின்பற்றிவருகிறோம்.

இந்த தினத்தின் சிறப்பை குறிக்கும் விதத்தில், குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் ஒற்றுமை சிலைக்கு முன்பாக 182 யோக கலைஞர்கள் 108 விதமான சூரிய நமஸ்காரம் எனப்படும் சுரிய வணக்கத்தை மேற்கொண்டனர்.

பட்டேல் சிலை முன் யோக கலைஞர்கள்

இந்த நிகழ்வை வதோதராவைச் சேர்ந்த சாயஜி ராவ் யோக ஆராய்ச்சி அமைப்பு நடத்தினர். பட்டேல் சிலையின் உயரமான 182 அடியை குறிக்கும் நோக்கில், இந்நிகழ்வில் 182 யோக கலைஞர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தெலுங்கில் 'தடம்' பதித்த 'ரெட்' பட முன்னோட்ட காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.