ETV Bharat / bharat

’கோவாக்சின்’ தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி: ஆர்வம் காட்டும் WHO

author img

By

Published : Jun 23, 2021, 2:45 PM IST

Updated : Jun 23, 2021, 3:43 PM IST

Covaxin
Covaxin

ஹைதராபாத் (தெலங்கானா): பாரத் பயோடெக் நிறுவனம் தான் தயாரித்திருக்கும் 'கோவாக்சின்' தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பிடம் தொடர்ந்து ஒப்புதல் கோரி வரும் நிலையில், இது குறித்து தற்போது உலக சுகாதார அமைப்பு தற்போது ஆர்வம் காட்டியுள்ளது.

அவசரகாலப் பயன்பாட்டுக்கு 'கோவாக்சின்' தடுப்பூசியை உபயோகிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள், பாரத் பயோடெக் நிறுவனம் இடையேயான கூட்டம் இன்று (ஜூன்.23) நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தடுப்பூசி தயாரிப்பு முறை குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்படாது என்றும், ஆனால் தடுப்பூசியின் தரம் குறித்த சுருக்கமான விளக்கத்தை முன்வைக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கான உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை செப்டம்பர் மாதத்திற்குள் பெற்றுவிடுவோம் என பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.

மேலும், இந்த அனுமதியைப் பெறுவதற்கான 90 விழுக்காடு ஆவணங்களை WHOவிடம் ஏற்கெனவே பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகவும், மீதமுள்ள ஆவணங்களை இந்த மாத இறுதிக்குள் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசிடம் தெரிவித்திருந்தது.

முன்னதாக நேற்று (ஜூன்.22) மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய மூன்றாம்கட்ட பரிசோதனையில், கோவாக்சின் தடுப்பூசி 77.8 விழுக்காடு செயல்திறனை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம்!

Last Updated :Jun 23, 2021, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.