ETV Bharat / bharat

அலிகாரில் 3 வயது குழந்தை நரபலியா? - போலீசார் விசாரணை!

author img

By

Published : May 24, 2023, 4:14 PM IST

Etv Bharat
Etv Bharat

தனது 3 வயது குழந்தையை நரபலி செய்துவிட்டதாக மைத்துனர் மீது குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலிகார் : அலிகார் மாநிலத்தில் தாந்திரீக சடங்குகளின்படி, தனது 3 வயது குழந்தையை நரபலி கொடுத்துவிட்டதாக தனது மைத்துனர் மீது குழந்தையின் தந்தை காந்தி பார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் நேற்று முன்தினம் (மே 22) குழந்தையின் சடலத்தை கல்லறையில் இருந்து மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

டோரி நகர் பகுதியைச் சேர்ந்த ஹிராலால். இவர் தனது 3 வயது குழந்தையை, மத்ராக் காவல் நிலைய எல்லைப்பகுதியில் உள்ள முகந்த்பூர் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் சில காலமாக வசித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், கடந்த மே 19 ஆம் தேதி தனது குழந்தை மாடியில் இருந்து கீழே விழுந்ததாக தனக்கு கிடைத்ததத் தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, குழந்தை ரித்தேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, தனது 'குழந்தை ரித்தேஷ் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழக்கவில்லை என்றும் தனது குழந்தையை மாந்திரீகம் செய்து தனது மைத்துனர் நரபலி செய்து விட்டதாகவும்' அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, ஹிராலாலின் சகோதரியின் குடும்பத்தில் நான்கு மகள்கள் இருக்கும் நிலையில், இரண்டு மகன்கள் எதிர்பாராத விதமாக சமீபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனக்கு மீண்டும் ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு தனது மைத்துனர் ராஜோ இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து குழந்தையின் தந்தை ஹிராலால் கூறுகையில், 'சந்தேகத்திற்கு இடமில்லாமல், எனது குழந்தை என் சகோதரியின் வீட்டில் தான் இருந்தது. மேலும், எனது குழந்தை தாந்திரீகம்-மாந்திரீகம் செய்து நரபலி செய்து கொலை செய்யப்பட்டது என்பதில் நான் உறுதியாக உள்ளதாகவும், ஆகவே, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்' என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், எனது சகோதரிக்கு மகள்கள் மட்டும் உள்ள நிலையில், ஆண் வாரிசு இல்லை என்பதே இவ்வாறு தனது குழந்தை நரபலி கொடுக்கப்பட காரணம் என்றும் ஹிராலால் தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த விவகாரத்தில் தனது சகோதரிக்கு நடந்த எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். குழந்தை உயிரிழந்தபோது, அதன் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ராஜோவின் இரண்டு மகன்களும் உயிரிழந்த நிலையில், மாந்திரீகர்களின் பேச்சைக் கேட்டு ராஜோ இவ்வாறு நரபலி செய்திருக்கக்கூடும் என அப்பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, மே 19 ஆம் தேதி, இரவில் குழந்தை ரித்தேஷ், தனது அத்தை வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், எதிர்பாரதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்ததாகவும், அப்பகுதியைச் சேர்ந்த மட்ராக் சிஓ விஷால் சௌத்ரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டது என கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக, குழந்தையை மே 19ஆம் தேதி உயிரிழந்த நிலையில், மே 22ஆம் தேதி அன்று அடக்கம் செய்திருப்பதில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, உடற்கூராய்வு அறிக்கை வெளியான பின்புதான், இது நரபலியா? இல்லை? என கண்டறியப்பட்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சைடிஷ் சாப்பிட்டதால் இளைஞர் வெட்டி கொலை.. கொலையாளி கைது..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.