ETV Bharat / bharat

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்: வயநாட்டை தொடர்ந்து கண்ணூரிலும் பரவல்

author img

By

Published : Aug 1, 2022, 5:50 PM IST

கேரளவின் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியதை தொடர்ந்து கண்ணூரிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

african-swine-fever-reported-in-kannur-and-wayanad-districts-of-kerala
african-swine-fever-reported-in-kannur-and-wayanad-districts-of-kerala

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் உள்ள இரண்டு பன்றி பண்ணைகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பண்ணைகளிலிருந்த 500-க்கும் மேற்பட்ட பன்றிகளை கொன்றனர்.

அதோடு மானந்தவாடியில் உள்ள மற்ற பன்றிப்பண்ணைகளிலும் ஆய்வு நடத்தி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவந்தனர். இந்த நிலையில், கண்ணூர் மாவட்டத்தின் நென்மேனி கிராமத்தில் உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கண்ணூர் மாவட்ட ஆட்சியர் தரப்பில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நென்மேனி கிராமத்தில் பதிவாகியுள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத் துறை உறுதிபடுத்தியுள்ளது. இந்த காய்ச்சல் கண்டறியப்பட்ட பண்ணையில் உள்ள 193 பன்றிகளை முதல்கட்டமாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள 222 பன்றி பண்ணைகளில் ஆய்வுகள் நடத்தவும், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அங்குள்ள பன்றிகளை கொல்லவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் 2 பேருக்கு குரங்கம்மை அறிகுறி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.