ETV Bharat / bharat

பூஜை அறையில் திருடன் தற்கொலை... வெளியூருக்கு சென்று திரும்பிய குடும்பத்துக்கு அதிர்ச்சி...

author img

By

Published : Oct 25, 2022, 11:04 AM IST

Etv Bharat
Etv Bharat

பெங்களூருவில் திருட சென்ற வீட்டிலேயே திருடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் இந்திரா நகரில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தீபாவளியை முன்னிட்டு அக்.18ஆம் தேதி வெளியூருக்கு சென்றனர். அதன்பின் நேற்று(அக். 24) வீடு திரும்பினர். அப்போது வீட்டின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. பூஜை அறையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் பெயர் பகதூர் என்பதும் அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாராணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை "அந்த வார்த்தையை" சொல்லி அழைத்த இளைஞருக்கு 18 மாதங்கள் சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.