நெடுஞ்சாலையில் பெரும் விபத்து; 48 வாகனங்கள் சேதம்

author img

By

Published : Nov 21, 2022, 7:29 AM IST

நெடுஞ்சாலையில் பெரும் விபத்து
நெடுஞ்சாலையில் பெரும் விபத்து ()

புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.20) இரவு நடந்த விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்தன.

புனே (மகாராஸ்ட்டிரா): புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நாவலே பாலத்தில் உள்ள சரிவினால் லாரியின் பிரேக் செயலிழந்தோ அல்லது கட்டுப்பாட்டை இழந்தோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

பாலத்தின் சரிவில் இருந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து சாலையில் சிந்திய எரிபொருளில் வழுக்கி பிற வாகங்கள் ஒன்றோடு என்று மோதி விபத்து நடந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தி 48 வாகனங்கள் சேதமடைந்தன. காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. புனே தீயணைப்பு துறை, புனே பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎம்ஆர்டிஏ) மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த மேம்பாலத்தில் விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பாலத்தின் சரிவு அதிகமாக இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேருகிறது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ரேஷன் கார்டில் மாறிய பெயர் - தாசில்தாரிடம் நாயாக மாறி குரைத்த நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.