ETV Bharat / bharat

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

author img

By

Published : Jul 15, 2023, 11:32 AM IST

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ராஜ்சமந்து மாவட்டதில் குளிக்க சென்ற 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துயுள்ளது.

ராஜ்சமந்த்: ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டம் அமேட் பகுதியில் ராச்செட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள பகாரியா பஸ்தியில் வசிக்கும் தேவலால் பகாரியாவின் 11 மற்றும் 9 வயது மகள்கள், அதேபோல் ஜகதீஷ் பகாரியா என்பவரின் 8 வயது மகன் மற்றும் 9 வயது மகள் ஆகிய நான்கு குழந்தைகள் நேற்று முன்தினம் (ஜூலை 13) அன்று வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்து உள்ளனர்.

அப்போது குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு யாருடைய உதவியும் இன்றி சென்று உள்ளதாகத் தெரிகிறது. பின்னர், நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அப்பகுதியில் தேடத் தொடங்கி உள்ளனர். அப்போது குழந்தைகள் நீரில் முழ்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர்களது உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்ட விடமால் தடுக்கும் கும்பல்.. கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் வேதனை!

இதனையடுத்து, உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே நேற்றைய முன்தினம் அன்று மதியம் குழந்தைகள் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம்.. தொப்பி வாப்பாவின் அதிரடி ஆஃபர்!

மேலும், இவர்களது குடியிருப்புக்கு பின்னால் உள்ள சிறிய குளம் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி இருந்து உள்ளது. அதனை அறியாத குழந்தைகள் தெரியாமல் அந்தக் குளத்திற்கு குளிக்கச் சென்று உள்ளனர். குளத்தில் இருந்து குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட, பின்னர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

அதனையடுத்து உடல்கள் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மேலும், இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீசுக்கு பயந்து தந்தையுடன் ஒளிந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி பலியான சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.