ETV Bharat / bharat

ஹிமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவு - இருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்

author img

By

Published : Feb 6, 2023, 1:02 PM IST

Updated : Feb 6, 2023, 1:31 PM IST

killed
killed

ஹிமாச்சல பிரதேசத்தில் ஷிங்கு லா கணவாய் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லை சாலைகள் நிறுவனத்தின் இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மாயமானார்.

லாஹவுல்-ஸ்பிட்டி: ஹிமாச்சல பிரதேசத்தில் லாஹவுல்- ஸ்பிட்டி மாவட்டத்தில் ஷிங்கு லா கணவாய் அருகே நேற்று(பிப்.5) மாலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை சாலைகள் நிறுவனத்தின் (BRO) ஊழியர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர்.

அவர்கள் பனியை அகற்றப் பயன்படுத்தப்பட்ட ஸ்னோ கட்டர் உள்ளிட்ட உபகரணங்களோடு பனியில் புதைந்ததாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பிஆர்ஓ மீட்புப்படையினர், ஊழியர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு இரண்டு ஊழியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மாயமான மற்றொரு ஊழியரை தேடி வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள், ராம் புதா மற்றும் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாயமானவர் நேபாளத்தைச் சேர்ந்த பசாங் செரிங் லாமா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிஆர்ஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அதானி குழும விவகாரம்; காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் எனத் தகவல்!

Last Updated :Feb 6, 2023, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.