பரிசல் பயணம்.. சொட்டும் மீன் சுவை.. ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - HOGENAKKAL Falls
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : May 26, 2024, 4:12 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/26-05-2024/640-480-21562757-thumbnail-16x9-dpi.jpg)
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் முடிய உள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதாலும், வெளி மாவட்டங்களைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் அதிகமாக குவிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்தும், மீன் உணவை சுவைத்தும் பரிசல் பயணம் மேற்கொண்டு சுற்றுலாவை இனிமையாக கொண்டாடி வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பரிசல் துறையில் குவிந்து வரிசையில் காத்திருந்து, பரிசலில் சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும், ஒகேனக்கல் தொங்கு பாலத்தில் இருந்து செல்பி எடுத்தும் சுற்றுலாவை இனிமையாக கொண்டாடினர். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக உள்ளது. இது மிதமான நீர்வரத்து என்பதால், ஆற்றுப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்து காணப்பட்டனர்.