Live: திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை! - EPS Tiruppur CAMPAIGN
Published : Apr 10, 2024, 5:15 PM IST
|Updated : Apr 10, 2024, 8:44 PM IST
திருப்பூர்: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது.ஆகவே, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து பேசி வருகிறார். அதன் நேரலைக் காட்சிகளை இங்கு காணலாம்..முன்னதாக, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கார்த்திகேயனை ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், தேர்தல் பிரச்சாரங்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளையும், பாஜக கூட்டணியில் உள்ள பாமக கட்சியினரையும் ஈபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுமட்டும் அல்லாது, அனைத்து தேர்தல் பிரச்சாரத்திலும், நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக மற்றும் அதிமுகவுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் போட்டி நிலவுகிறது என ஈபிஎஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.