LIVE: தருமபுரியில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
Published : Mar 11, 2024, 10:24 AM IST
|Updated : Mar 11, 2024, 11:15 AM IST
தருமபுரி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மூன்று மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் நேரலை காட்சிகள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ள திட்டப்பணிகள்:நிறைவடைந்த திட்டப்பணிகள்மாவட்டம்மதீப்பீடுபணிகள்தருமபுரி ரூ.151.89 கோடி 879 பணிகள்கிருஷ்ணகிரி ரூ.34.10 கோடி41 பணிகள்சேலம் ரூ.73பணிகள்73 பணிகள்தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ரூ.258.99 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டப்பணிகளை திறந்து வைக்கவுள்ளார். புதிய திட்டப்பணிகள்மாவட்டம்மதீப்பீடுபணிகள்தருமபுரி ரூ.37.44கோடி51 பணிகள்கிருஷ்ணகிரி ரூ.64.56கோடி17 பணிகள் சேலம் ரூ.12 கோடி7 பணிகள்தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ரூ. 114.19 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.நலத்திட்ட உதவிகள்மாவட்டம்மதீப்பீடுபயனாளிகள்தருமபுரிரூ.55.76 கோடி3,856 பயனாளிகள் கிருஷ்ணகிரி ரூ.21.63கோடி2,206 பயனாளிகள்சேலம்ரூ.18.15 கோடி 2,674 பயனாளிகள்தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 8 ஆயிரத்து736 பயனாளிகளுக்கு, ரூ. 95.54 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ரூ.560.23 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.