ETV Bharat / state

பெரம்பலூரில் மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருடிய பெண் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 1:43 PM IST

மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருடிய பெண் கைது
மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருடிய பெண் கைது

Perambalur News: பெரம்பலூரில் தனியாா் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் 9 பவுன் நகை, 2 ஜோடி வைரத் தோடுகளை திருடிச்சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்: எளம்பலூா் சாமியப்பா நகரைச் சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் மனைவி ஜெயமணி என்ற மூதாட்டி. இவா் கடந்த 22 ஆம் தேதி வேலை காரணமாக துறையூர் சென்று விட்டு, மீண்டும் பெரம்பலூருக்கு தனியார் பேருந்தில் வந்துள்ளார். அப்போது, அவரது கைப்பையில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மற்றும் இரண்டு ஜோடி வைர தோடு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜெயமணி பெரம்பலூா் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களளை ஆய்வு செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சோலையம்மா என்பவர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் சோலையம்மாவை நேற்று (ஜன. 29) கைது செய்து, அவரிடமிருந்து திருடுபோன 9 பவுன் நகைகள் மற்றும் 2 ஜோடி வைரத் தோடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஓசி சிகரெட் தர மறுத்ததால் ஆத்திரம் - கடை உரிமையாளரை பட்டா கத்தியால் மிரட்டிய இளைஞர்கள்! சிசிடிவி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.