ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? - சென்னையில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 3:45 PM IST

Etv Bharat
Etv Bharat

PMK Alliance: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நடந்த அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் உள்ளிட்ட 24 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஆளும் திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்ய எம்.பி.,கனிமொழி தலைமையில் ஒரு குழுவையும், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான உள்ள அதிமுகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவுகளை தான் பார்த்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக வலுவான கூட்டணியை அமைக்க திட்டுள்ளதாகவும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் முக்கிய வாக்கு வங்கியை கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, திமுக, அதிமுக அல்லது பாஜக கூட்டணி என எந்தக் கூட்டணியில் இடம்பெறப்போகிறது என பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் சிறப்பு பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னை ராணி மெய்யம்மை அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகள் எடுக்கும் முழு அதிகாரம் மருத்துவர் ராமதாஸுக்கு வழங்கி முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தாமதத்திற்கு தமிழக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 24 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,"தமிழ்நாடு அரசு பீகார், கர்நாடாக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை பின்பற்றி உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது எனவும் தெரிவித்தார். கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தங்களது முடிவை விரைவில் அறிப்போம் என்றார். அதிமுக கூட்டணியில் இருந்து அழைப்பு வந்ததா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வந்திருக்கலாம்" என்று சூசசகமாக பதில் அளித்தார்.

இதையும் படிங்க: Budget 2024: வருமான வரி செலுத்துபவர்களுக்கு நிம்மதி! இடைக்கால பட்ஜெட்டில் வரிவிகித அறிவிப்பு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.