ETV Bharat / state

அரியலூரில் இரண்டரை வயது குழந்தை கழிவு நீர் வடிகால் உறை குழியில் விழுந்து உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 11:09 AM IST

அரியலூரில் இரண்டரை வயது குழந்தை கழிவு நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட உறை குழியில் விழுந்து பலி
அரியலூரில் இரண்டரை வயது குழந்தை கழிவு நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட உறை குழியில் விழுந்து பலி

Ariyalur girl death: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழிவு நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட உறை குழியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமம் வடக்கு காலனி தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டரை வயதுடைய குழந்தை சர்வேஸ்வரன், தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். ஆனால், சிறிது நேரம் கழித்து குழந்தையைத் தேடியபோது காணவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் குழந்தையைத் தேடி உள்ளனர். அப்போது, அதே கிராமத்தில் வடக்கு காலனியில் மினி டேங்க் அருகே ஊராட்சி நிர்வாகத்தால் கழிவு நீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட உறை குழியில் சர்வேஸ்வரன் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தாயார் ஜெயலஷ்மி குழந்தையை மீட்டு பார்த்தபோது இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உறை குழி கழிவு நீர் வடிகாலுக்காக ஊராட்சி நிர்வாகத்தால் வெட்டப்பட்டு, கடந்த ஒரு வருடமாக மூடாமல் அப்படியே விட்டதால், குழந்தை அதில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: அரியலூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.