ETV Bharat / state

15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை; 14 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 3:39 PM IST

15 வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை
15 வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை

TN Transport Workers: போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த, 14 பேர் கொண்ட குழுவை அமைத்து, போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த, 14 பேர் கொண்ட குழுவை அமைத்து, போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை, கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்ட நோட்டீசை ஏற்கனவே வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், கடந்த ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின், நீதிமன்ற அறிவிறுத்தல் அடிப்படையில், போக்குவரத்து துறை சங்கமானது தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது .

அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி ஜனவரி 19ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் மீண்டும் சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் வருகிற 21ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்ககள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்து தமிழக அரசின் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.