ETV Bharat / state

"இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 4:42 PM IST

tn-chief-electoral-officer-satya-pratha-sahu-explains-regarding-case-against-annamalai-for-violating-election-norms
"இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு!

TN Chief Electoral Officer Satya Pratha Sahu: தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கோயம்புத்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அண்ணாமலை பிரச்சாரம் தொடர்பாகக் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இரு தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் 300 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகத் தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “வாகனத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தும், அவர் தனது கட்சியின் தொண்டர்களைச் சந்திக்கச் சென்றதாக விளக்கம் அளித்து காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார். அவரது நடவடிக்கை தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டது என அவரிடம் விளக்கிய போதிலும், அவர் எங்களை மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினார்” என்று குறிப்பிட்டு காவல்துறை அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோவுடன் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “சி-விஜில் மூலம் இதுவரை 4 ஆயிரத்து 100-க்கு மேல் புகார்கள் வந்துள்ளது. இதுவரை 92.80 சதவீதம் பூத் சிலீப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. விடுபட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்.

பூத் சிலீப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் தபால் வாக்களிக்க நாளை கடைசி நாள். தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி தபால் வாக்குக்களைத் தபால் மூலமாக அனுப்ப முடியாது. தேர்தல் நாள் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறும்.

அதன் பிறகு, எந்த வகையில் பிரச்சாரம் செய்யக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது. அண்ணாமலை பிரச்சாரம் தொடர்பாகக் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டால், தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலையை சூழ்ந்த போலீசார்..சூலூரில் அண்ணாமலை உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.