ETV Bharat / state

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 3:18 PM IST

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை
மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை

POCSO Case: தஞ்சாவூரில் கடந்த 2022ஆம் ஆண்டு மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தஞ்சை போக்சோ நீதிமன்றம் சாகும் வரை சிறைத் தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 60 வயதான கூலித் தொழிலாளி, கடந்த 2022ஆம் ஆண்டில் தனது சொந்த மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார். தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனை அடுத்து, அந்த சிறுமி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போதுதான், அந்த சிறுமியை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்த விவரம் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் சுகந்தி, கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

இந்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தர்ராஜ், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 2.5 லட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

இதையும் படிங்க: குமரியில் காணாமல்போன பள்ளி மாணவி; திருப்பூரில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.