ETV Bharat / state

ராஜேஷ் தாஸ் வழக்கு; தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! - rajesh das case update

author img

By ANI

Published : May 23, 2024, 4:09 PM IST

Rajesh das case: பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ் சரணடைய இடைக்கால தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்த விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ராஜேஷ் தாஸ் கோப்புப்படம்
ராஜேஷ் தாஸ் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: கடந்த 2021ஆம் ஆண்டு பணியில் இருந்த பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அந்த தண்டனையை கடந்த மாதம் 12ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதனை அடுத்து, உச்ச நீதிமன்றம் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில், அடுத்த விசாரணை வரும் வரை ராஜேஷ் தாஸ் சரணடைவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஜூலை 12-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: நீ இப்படி தான் இருப்பியா? AI மூலம் உருவான காணாமல் போன குழந்தையின் படம் - தவிக்கும் பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.