ETV Bharat / state

காரைக்குடி மின் தட பராமரிப்பு பணிமனையில் என்னென்ன வசதிகள் உள்ளன? - முழு விவரம்! - electrical maintenance workshop

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 7:23 PM IST

Karaikudi Railway Station: காரைக்குடி ரயில் நிலையத்தில் மின்தட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தட பராமரிப்பு பணிமனை தனியாக தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில், மின் தட பராமரிப்பு பனிமனை புகைப்படம்
ரயில், மின் தட பராமரிப்பு பனிமனை புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, மின்தட பராமரிப்பு பணிமனை தனியாக துவக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சி - காரைக்குடி - மானாமதுரை ரயில் பிரிவில், மின்மய மின் தட ரயில் பாதையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும், காரைக்குடியில் ஒரு பணிமனை ரூ.1.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை கடந்த மே 20ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதில், ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் உள்ளது. இந்த ரயில் பெட்டி மூலம் நடுவழியில் ஏற்படும் திடீர் மின் தட பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும். பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ரயில்களை தங்கு தடை இன்றி குறித்த காலத்தில் இயக்க முடியும்.

வசதிகள்: இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமிருந்தும் இயக்கலாம். இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ரயில் ஓட்டுநர் அறைகள், ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட சாமான்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய மேலே செல்லும் வகையிலான ஹைட்ராலிக் ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி ஆகியவை உள்ளன.

ஹைட்ராலிக் ஏணி சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஹைட்ராலிக் ஏணியில் உள்ளது. மதுரை கோட்டத்தில் 1,124 கி.மீ ரயில் பிரிவில் 1,742 கி.மீ மின்மய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாசரேத், ராஜபாளையம், புனலூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களில் 15 பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு பராமரிப்பு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு ஒரு பராமரிப்பு ரயில் பெட்டி விரைவில் வழங்கப்பட இருக்கிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "நீ இப்படி தான் இருப்பியா?" AI மூலம் கிடைத்த காணாமல் போன குழந்தையின் படம் - தவிக்கும் பெற்றோர்! - AI IN CHILD MISSING CASE

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, மின்தட பராமரிப்பு பணிமனை தனியாக துவக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சி - காரைக்குடி - மானாமதுரை ரயில் பிரிவில், மின்மய மின் தட ரயில் பாதையில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும், காரைக்குடியில் ஒரு பணிமனை ரூ.1.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை கடந்த மே 20ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதில், ரயில் பாதையில் இயங்கும் வகையிலான பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று தயார் நிலையில் உள்ளது. இந்த ரயில் பெட்டி மூலம் நடுவழியில் ஏற்படும் திடீர் மின் தட பழுதுகளை எளிதாக சரி செய்ய முடியும். பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ரயில்களை தங்கு தடை இன்றி குறித்த காலத்தில் இயக்க முடியும்.

வசதிகள்: இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை இருபுறமிருந்தும் இயக்கலாம். இந்த ரயில் பெட்டி சிறிய பராமரிப்பு பணிமனை போல அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ரயில் ஓட்டுநர் அறைகள், ஜெனரேட்டர், பராமரிப்பு தளவாட சாமான்கள் வைக்கும் பகுதி, நடுப்பகுதியில் மின்சார வயர்களை ஊழியர்கள் ஆய்வு செய்ய மேலே செல்லும் வகையிலான ஹைட்ராலிக் ஏணி, ஊழியர்கள் அமரும் பகுதி ஆகியவை உள்ளன.

ஹைட்ராலிக் ஏணி சுழலும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஹைட்ராலிக் ஏணியில் உள்ளது. மதுரை கோட்டத்தில் 1,124 கி.மீ ரயில் பிரிவில் 1,742 கி.மீ மின்மய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, நாசரேத், ராஜபாளையம், புனலூர் மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களில் 15 பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, மானாமதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு பராமரிப்பு ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு ஒரு பராமரிப்பு ரயில் பெட்டி விரைவில் வழங்கப்பட இருக்கிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "நீ இப்படி தான் இருப்பியா?" AI மூலம் கிடைத்த காணாமல் போன குழந்தையின் படம் - தவிக்கும் பெற்றோர்! - AI IN CHILD MISSING CASE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.