ETV Bharat / state

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 8:44 AM IST

அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

Salem POCSO arrest: சேலம் மாவட்டத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம்: சேலத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் 44 வயதான ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச புகைப்படங்களைக் காட்டி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் தலைமறைவாக இருந்த ஆசிரியர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் சுமித்ரா தலைமையில் அப்பகுதிக்குச் சென்ற போலீசார், ஆசிரியரை கைது செய்தனர். பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் மற்றும் செல்போனுக்கு 'நோ'.. சேலம் பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு நடத்தி அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.