ETV Bharat / state

கோவையில் ஸ்வீட் வாங்கிய ராகுல் காந்தி.. பணியாளர்கள் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்கள்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 8:26 PM IST

RAHUL GANDHI IN COVAI SWEET SHOP
RAHUL GANDHI IN COVAI SWEET SHOP

RAHUL GANDHI IN COVAI SWEET SHOP: கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த ராகுல் காந்தி, சாலையில் வண்டியை நிறுத்தி ஓடி சென்று இனிப்பு கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கியது கடை ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RAHUL GANDHI IN COVAI SWEET SHOP

கோயம்புத்தூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சித் தலைவர்கள் தமிழகம் வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கோவை செட்டிபாளையம் பகுதியில் நேற்று இண்டியா கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்விற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுல் காந்தி சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சிங்காநல்லூர் பகுதியில் வாகனத்தில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி டிவைடரை தாண்டி அங்கிருந்த இனிப்பு கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கி பணியாளர்களுடன் உரையாடி புகைப்படம் எடுத்து கொண்டார்.

பிரச்சாரத்திற்காக கோவை வந்த ராகுல் காந்தி, எதிர்பாராத விதமாக இனிப்பு கடைக்கு சென்று இனிப்பு பண்டங்களை வாங்கியது, அந்த கடை ஊழியர்களை நெகிழச்சியடைய செய்துள்ளது. இது குறித்து பேசிய கடை ஊழியர் பாபு, நேற்று எதிர்பாராத விதமாக ராகுல்காந்தி , டிவைடரை தாண்டி கடைக்கு வந்தார். நாங்கள் வேறு யாரோ அரசியல்வாதி தான் வருகிறார்கள் என்று நினைத்தோம், ஆனால ராகுல் காந்தி வந்தார்.

எந்த பந்தாவும் இல்லாமல், வாடிக்கையாளராக வந்து கடையை சுற்றி பார்த்தார். கடையில் உள்ள பலகாரங்களை கொடுத்தோம். அவற்றை சுவைத்து பார்த்தார். பிறகு மைசூர்பாக் ஒரு கிலோ வாங்கினார். எனது சகோதரருக்கு என்று கூறினார் அப்போது எங்களுக்கு புரியவில்லை, பின்பு தான் அது முதலமைச்சருக்கு என்று தெரிந்தது. சாதாரண வாடிக்கையாளர் போலவே பழகினார். ராகுல் காந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி. எங்களுடன் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்தது ரொம்ப மிகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

பிறகு பேசிய ஊழியர் அம்பிகா, “ராகுல் காந்தி வந்தது அதிர்ச்சியாக இருந்தது. அதில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. முதலமைச்சருக்கு இனிப்புகள் வாங்கி சென்று கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இனிப்புகளை ரூசி பார்த்து நன்றாக இருக்கிறது என்றார். ராகும் காந்தி தமிழ் மற்றும் இந்தி மொழியில் பேசினார்” என்றார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: வாக்குச்சாவடிகளில் கழிவறை, குடிநீர், பந்தல் ஏற்பாடு: ராதாகிருஷ்ணன் தகவல் - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.