ETV Bharat / state

நிலத் தகராறில் கத்திக்குத்து! காவல் நிலையம் அருகே களேபரம்! பாமக நிர்வாகிக்கு வலைவீச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 8:28 PM IST

Govindaraj
கோவிந்தராஜ்

Attempt murder: திருப்பத்தூர் அருகே இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானதாக கூறப்படும் பாமக நிர்வாகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 60) என்பவருக்கு சொந்தமான வீட்டுமனை ஆம்பள்ளி அருகே உள்ளது. இதற்கு அருகில் பிரேம்குமார் (வயது 35) என்பவருக்கும் வீட்டு மனை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரேம்குமார் கந்திலி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் (வயது 33) தெரிவித்துள்ளார். இவர் அப்பகுதியில் பா.ம.க ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து கோவிந்தராஜ் பிரேம்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.

இதனையறிந்த புஷ்பராஜ் மகன்களான, சிவராமன் மற்றும் சிங்காரவேலன் ஆகிய இருவரும் கோவிந்தராஜிடம் சென்று எங்களுடைய பிரச்சனையில் நீ எதற்கு தலையிடுகிறாய்? உனக்கும் இதற்கு என்ன சம்பந்தம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், அருகில் இருந்த கத்தியை எடுத்து சிங்காரவேலனின் வயிறு மற்றும் முதுகு பக்கத்தில் குத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால் நிலைகுலைந்த சிங்காரவேலன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனையடுத்து அவரது அண்ணன் சிவராமன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு 20 தையல் போடப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கந்திலி போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட கோவிந்தராஜ் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக உள்ள பாமக நிர்வாகியான கோவிந்தராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சானியா மிர்சா திருமண முறிவு? சோயிப் மாலிக் 3வது திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.