ETV Bharat / state

நீலகிரியில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் எல்.முருகன்.. வாகன பேரணி சென்று வாக்கு சேகரிப்பு! - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 1:51 PM IST

Etv Bharat
Etv Bharat

Bjp Candidate L.Murugan: கோவை மாவட்டம் அன்னூரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

கோயம்புத்தூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகள் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனையொட்டி, அரசியில் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அன்னூரில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.பேரணி அன்னூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி குருக்கிலியாம்பாளையம், ஜெ.ஜெ நகர், ஜீவா நகர், பொகலூர், குமரன் குன்று வழியாக மேட்டுப்பாளையம் சென்றனர்.

அப்போது சாலையில் வந்தவர்கள் சாலையோரம் இருந்த பொதுமக்களிடையே பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோஷமிட்டும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் பாஜக கொடியை கட்டியபடி பேரணியாக சென்றனர். அதில், எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே தாமரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டு கொண்டார். இதில் பாஜகவினர் ஏராளமானவர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னூரில் தொடங்கிய இருசக்கர வாகன பிரச்சாரம் மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி வழியாக சென்று உதகையில் நிறைவு செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க: இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள் - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.