ETV Bharat / state

திருச்செந்தூர் மாசி திருவிழா: 18 அடி நீள வேல் அலகு குத்தி பக்தர் பரவசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 5:39 PM IST

Tiruchendur Masi Festival 2024
திருச்செந்தூர் மாசி திருவிழா 2024

Tiruchendur Masi Festival 2024: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் 18 அடி நீள வேல் அலகு குத்தி பரவசத்துடன் பக்தர் ஆடியது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

திருச்செந்தூர் மாசி திருவிழா 2024

திருசெந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலாகத் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் இத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர்.

மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அலகு வேல் குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் மாசித்திருவிழா தொடங்கியதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியை சேர்ந்த பக்தர் காளிதாஸ் என்பவர் பாதயாத்திரையாக வந்து 18 அடி அலகுவேல் குத்தி வேண்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது பக்தர் காளிதாஸ் கோயில் வளாகத்தில் 18 அடி நீள வேலுடன் பக்தி பரவசம் கொண்டு ஆடியது பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில், நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: "தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு" - சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.