ETV Bharat / state

சித்த மருத்துவ சேவை தொடங்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க மதுரை கிளை உத்தரவு! - Siddha medical services

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 7:41 PM IST

Siddha Medical Services
Siddha Medical Services

Siddha Medical Services: ஆறு மாநகராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ சேவையை தொடங்க உத்தரவிடக்கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், கன்னியாகுமரி, கரூர் மற்றும் சிவகாசி ஆகிய புதிதாக தொடங்கப்பட்டுள்ள 6 மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ சேவையை தொடங்கி நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், சித்த மருத்துவ சேவை வழங்க வேண்டும்.

ஆயுர்வேத, யுனானி, சித்தா போன்ற இந்திய மருத்துவ முறையை மத்திய , மாநில அரசுகள் ஊக்குவித்து வரும் நிலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சித்த மருத்துவ பிரிவு இல்லாததால் மக்கள் சித்த மருத்துவ சேவையை பெற முடியாமல் அலோபதி மருத்துவ முறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். தமிழகத்தில் ஏழு மாநகராட்சிகளில் உள்ள நகர்ப்புற மருத்துவமனைகளில் சித்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே புதிதாக தொடங்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகளில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ பிரிவை தொடங்கி சேவை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலிலும் வியாபாரம்.. சாலையோர வியாபாரிகளுக்கு உதவிய பள்ளி மாணவி! - Roadside Workers

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.