ETV Bharat / state

ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி ஏற்படுத்தி தரக்கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - madras high court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 6:46 PM IST

madras high court
madras high court

Madras High Court: தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி, சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி, தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றியமைக்கப்படவில்லை என கூறியுள்ளார். இந்த சட்டத்தின் படி, 2022ஆம் ஆண்டிலேயே மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றி அமைத்திருக்க வேண்டிய நிலையில், இன்னும் அந்த பணிகள் செய்து முடிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, டி.பரத சக்கரவர்த்தி அமர்வு, மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி.. பாஜக மீதான அதிருப்திக்கு காரணம் என்ன? - Thada Periyasamy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.