ETV Bharat / state

சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் முதல் துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Wetlands IN TAMILNADU

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 4:17 PM IST

Etv Bharat
Etv Bharat

Wetland Census: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், முன்னோடி திட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போதைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணிகளுக்காக நிபுணர்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அரசுக்கு அனுமதியளித்து, வழக்கின் விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: இந்திய புள்ளியல் துறைக்கு சதுப்பு நிலம் ஒதுக்கிய உத்தரவு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.